தென்னாப்பிரிக்கா, லிம்போபோவில் உள்ள மோரியா என்ற நகரத்துக்கு ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டத்துக்காக 40க்கும் மேற்பட்டடர்கள் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பஸ் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 45 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில், 8 வயது சிறுமி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.