சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சி

16

உதவி பொதுச் சுகாதார பரிசோதகர் மீது ராகம பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்த முயன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மத்துமகல ராகம பகுதியில் உள்ள பொதுச் சுகாதார பரிசோதகர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் இவரை சுட முயன்றுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், அவர்களது முயற்சி தோல்வியடைந்த நிலையில் அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

அத்துடன், இந்த சம்பவம் சிசிரிவி காட்சிகள் பதிவாகியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Join Our WhatsApp Group