சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று(28) போவா மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.
சீனாவின் Henan மாகாணத்தில் இடம்பெறும் இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் உயர்மட்ட பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதனிடையே, பிரதமர் நேற்று(27) சீன ஜனாதிபதியை சந்தித்திருந்தார்.
இலங்கையின் சுயாதீனத்தன்மை, ஒருமைப்பாடு, இறைமையின் பாதுகாப்பிற்காக சீனா எப்போதும் முன்னிற்கும் என சீன ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.