மைத்ரிபாலவை உடன் கைது செய்ய வேண்டும் – முஷாரப் எம்.பி

19

ஈஸ்டர் குண்டு தாக்குதல் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிரிசேன குறிப்பிட்டுள்ள தகவல்களால் இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் SMM முஷாரப் தெரிவித்தார்

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் அரசியல் இறையாண்மைக்கு மாபெரும் பங்கம் ஏற்பட்டுள்ளது.

அவர் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் உண்மை எனில், குற்றச் செயலையும், குற்றவாளிகளையும் மறைத்த முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன உடன் கைது செய்யப்பட வேண்டும்.

அத்துடன் அவரிடம் சரியான முறையில் விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய சூத்திரதாரிகளுக்கு கடுமையான தண்டனையை வழங்க வேண்டும் எனஅவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Join Our WhatsApp Group