நபரை கடத்தி கப்பம் கோரிய குழுவினர் கைது

21

ஒரு நபரை கடத்திச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவரின் மனைவியின் முறைப்பாட்டையடுத்து மொரகஹஹேன பொலிஸார் கடத்தல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மொரகஹஹேன, கோரலைம என்ற இடத்தில் காரில் வந்த நான்கு நபர்களால் வியாழக்கிழமை கடத்திச் செல்லப்பட்டதாகவும், பின்னர் அவர்கள் கப்பம் கோரியுள்ளனர்.

கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர்களை, குற்றத்திற்கு பயன்படுத்திய வாகனத்துடன் போலீசார் கைது செய்தனர்.

சந்தேகநபர்கள் 28 மற்றும் 45 வயதுடைய கொடதெனிய மற்றும் அங்கொட பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மொரகஹஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Join Our WhatsApp Group