இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ரி20 தொடரின் முதல் போட்டி இன்று (04) பி.ப. 5.30 மணிக்கு சில்ஹட்டில் நடைபெறவுள்ளது.
முழுமையான கிரிக்கெட் சுற்றுப்பயணம் ஒன்றாகவே இலங்கை அணி பங்களாதேஷ் பயணித்துள்ளது. இதில் ஆரம்பத்தில் மூன்று ரி20 போட்டிகளில் ஆடும் இலங்கை அணி தொடர்ந்து மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது. எனினும் எதிர்வரும் ஜூன் மாதத்தில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் ரி20 உலகக் கிண்ணப் போட்டி நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன் இலங்கை அணி ஆடும் கடைசி ரி20 தொடர் இதுவென்பதால் முக்கியமானதாக உள்ளது.