`நான் விளையாடுவதை முதல் முறையாக அம்மா பார்க்கிறார்’- பாபர் அசாம் நெகிழ்ச்சி

15

நேற்று நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியும் எதிர்த்து பெஷாவர் ஸால்மி அணியும் மோதின. இதில் பெஷாவர் ஸால்மி அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய பெஷாவர் ஸால்மி அணி கேப்டன் பாபர் அசாம் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் சதம் அடித்தது குறித்து பேசிய பாபர் அசாம். “ என் அம்மா முதல் முறையாக ஆட்டத்தைப் பார்க்க நேரில் வந்திருந்தார். எனது இன்னிங்ஸை ரசித்தார். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். அவர் எப்போதும் வீட்டில் எனது ஆட்டத்தைப் பார்ப்பார். ஆனால் நேரில் வந்து பார்த்ததை எனது அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். அவர் நேரில் ஆட்டத்தைப் பார்க்க வந்தார். நான் சதம் அடித்து விட்டேன். மகிழ்ச்சியாக இருக்கிறது.” என்று கூறியிருக்கிறார். பாபர் அசாம் தனது அம்மாவுடன் மைதானத்தில் நின்றுகொண்டிருந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Join Our WhatsApp Group