நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நடைபெறவுள்ள கந்தசஷ்டி உற்சவ காலத்தையொட்டி வீதிகள் தடை செய்யப்படவுள்ளன என்று யாழ். மாநகர சபை அறிவித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் 14 ஆம் திகதி தொடக்கம் 17 திகதி வரை மற்றும் 19 ஆம் திகதிகளில் பிற்பகல் 5 மணி தொடக்கம் 6 மணிவரையும் 18 ஆம் திகதி சூரன்போரன்று நண்பகல் 12 மணி தொடக்கம் இரவு 7 மணிவரையும் ஆலய சுற்று வீதி தடைசெய்யப்படவுள்ளது.
பொது மக்கள் வீதியைப் பயன்படுத்துவோர் மாற்றுப் பாதைகளை வழமைபோல் பயன்படுத்துமாறு மாநகர சபை ஆணையாளர் இ.த.ஜெயசீலன் அறிவித்துள்ளார்.