ஜனாதிபதி-GMOA இடையிலான கலந்துரையாடல் வெற்றி : சுகாதார துறையினரின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு

15

சுகாதார துறையினர் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு எதிர்வரும் ஒருமாத காலத்திற்குள் அரசாங்கம் தீர்வை வழங்கும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இடையில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

சுகாதார துறையினர் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலைத் தொடர்ந்து கருத்துரைக்கையிலே அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நியாயமற்ற வரிக் கொள்கை, நாட்டில் இருந்து வெளியேறும் வைத்தியர்கள், மருத்துவ கொடுப்பனவுகள் மற்றும் சம்பள பிரச்சினைகள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினர் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அண்மைக்காலமாக தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தது.

இதற்கமைய, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் மாகாண ரீதியில் வேலை நிறுத்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

தொடர்ந்து, அரச அதிகாரிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற சாதகமான பதிலை கருத்திற்கொண்டு வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Group