பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நாளை மாலை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி தனது விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார். இரு தலைவர்களும் பகிரப்பட்ட பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்கள் குறித்து விவாதிப்பார்கள். பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது வரலாற்றுச் சிறப்புமிக்க விஜயம் இதுவாகும்.