உலகளவில் அதிகரிக்கும் வெப்பநிலையின் தாக்கத்தை வெளிப்படுத்துவதற்கு இயந்திர மனிதக் கருவி ஒன்றை உருவாக்கியுள்ளனர் ஆய்வாளர்கள்.அமெரிக்காவின் அரிஸோனா ஸ்டேட் பல்கலைக்கழகத்தைச் (Arizona State University) சேர்ந்த ஆய்வாளர்கள் இயந்திரத்தை உருவாக்கினர்.
அதனால் வேர்வை சிந்தமுடியும்…மூச்சு விட முடியும்…நடுங்கமுடியும்…வெளிப்புறத்தில் இருக்கும்போது சுற்றுப்புறத்திலிருந்து உடலுக்குள் எவ்வளவு வெப்பம் செல்கிறது என்பதை இயந்திர மனிதக் கருவி கணக்கிடும்அதற்கு ஏற்றவாறும் அது செயல்படும்.இயந்திரத்தின் முழுதும் பொருத்தப்பட்டுள்ள உணர்கருவிகள் வெப்பத்தைக் கண்காணிக்க உதவும்.அதில் நிறுவப்பட்டுள்ள குளிரூட்டும் செயல்முறை இயந்திரம் ‘மூச்சு’ விடவும் வேர்வை சிந்தவும் வகைசெய்யும்.