சர்வ கட்சி மாநாட்டின் நோக்கம் புரியவில்லை ; தெளிவுபடுத்தவும் யாரும் இல்லை – திஸ்ஸ அத்தநாயக்க

16

பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இன்றைய ஊடக சந்திப்பில் தெரிவித்த கருத்துக்களின் சாரம்சம்

*சர்வ கட்சி மாநாடு உண்மையான நோக்கங்களுடன் மேற்கொள்ளப்படும் போது எந்தவொரு கலந்துரையாடலும் வெற்றியளிப்பதாகவும்,இது அரசியல் விளையாட்டாகவும்,சூழ்ச்சியாகவும் அமையக் கூடாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

*சர்வ கட்சி மாநாட்டிற்கு தமக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும்,ஆனால் இதுவரையில் எந்த நிகழ்ச்சி நிரல் என்பது குறித்து தெரியாதுள்ளதாகவும், அதிகாரியொருவர் ஊடாக சர்வகட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் ஒருவர் ஒன்றைக் கூறுவதாகவும்,பிரிதொரு அமைச்சர் மற்றொன்றை கூறுவதாகவும் எனவே சர்வ கட்சி மாநாட்டிற்கு முன்னர் ஆளும் தரப்பினர் ஒன்றிணைந்து ஒரு நிலைப்பாட்டை எட்டுமாறும் கோரிக்கை விடுத்தார்.

*இந்திய விஜயத்தின் பிற்பாடு சகல தேர்தல்களும் அடுத்த வருடத்துக்கள் நடத்தப்படும் என்ற எதிர்பாரப்பு நிலவுகிறது.

*சமகி ஜன பவுர மற்றும் சதஹம் யாத்ரா வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.சதஹம் யாத்ராவின் 1550 ஆவது சகவாழ்வு விகாரை விஜயம் கேகாலை கலிகமுவ பிரதேசத்தில் நடத்த தீர்மானம்.

*சர்வகட்சி மாநாட்டிற்கு சஜித் பிரேமதாச அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டாலும் எந்தோக்கத்திற்காகவென்ற எந்த குறிப்பும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.பல்வேறு காரணங்கள் இதற்கு தெரிவிக்கப்படுகின்றன.நோக்கம் பற்றிய தெளிவு எங்களுக்கு தெரியவில்லை.

*அவ்வாறு 13 ஆவது திருத்ததை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பானதாக இருந்தால் முதலில் மாகாண சபை தேர்தலை நடத்துமாறு கோருகிறோம்.

*ஜனாதிபதியின் செயற்பாடுகளாலையே ஆறு வருடங்களுக்கும் மேலமாக மாகாண சபையின் செயற்பாடுகள் முடக்கிக் கிடக்கின்றன.

*இந்தியாவை திருப்பதிப்படுத்தவும்,தமிழ் அரசியல் கட்சிகளை திருப்படுத்தவும் இந்த சர்வகட்சி மாநாடு அமையக் கூடாது என்பதே ஐக்கிய மக்கள் சக்தியினது அபிப்பிராயமாகும்.

*வரலாறு நெடுகிலும் இவ்வாறான அரசியல் நாடகங்களை கடந்திருக்கிறோம்.

*நாட்டின் பொருளாதார நிலவரம்

*இலங்கை கிரிகெட் சபையில் இடம் பெற்று வரும் ஊழல் மோசடிகள்.

*கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்படும் மோசடிகளை கூட ஏன் நடத்தாமல் இருப்பது என்பது எமக்கு பிரசிச்சினையாகும்.

*விளையாட்டுத் துறை அமைச்சர் இவற்றை கண்டும் காணாமல் இருப்பது ஏன்? விளையாட்டுத்துறை அமைச்சர் இதற்கு பொறுப்புக் கூற வேண்டும்.

*நிதி மோசடி செய்யும் பிரதான சபையாக இலங்கை கிரிகெட் சபை மாறியுள்ளது.இது அரச நிறுவனமாகும்.யாருக்கும் சொந்தமான தனி நிறுவனமல்ல.முறைகேடுகளை விசாரிக்க விளையாட்டுத் துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எமது கோரிக்கையாகும்.

*மனுஷ நாணாக்காரவின் கருத்து அவரது சந்தர்ப்பவாத கருத்தாகும்.

Join Our WhatsApp Group