நொச்சியாகம தம்புத்தேகமப் பகுதியில் நேற்று நள்ளிரவு மது போதையில் போக்குவர்தது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நடு வீதியில் படுத்துக் கிடக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
குறித்த அதிகாரி தான் பயணித்த மோட்டார் சைக்கிளை வீதியில் போட்டுவிட்டு நடுவீதியில் புரண்டு கொண்டிருந்த வீடியோ காட்சிகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
இவரின் இந்த செயற்பாட்டால் வாகனச் சாரதிகள் கடும் அசௌகரியங்களை எதிர் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.