ரெலிகொம் நிறுவன தலைவர் பதவியிலிருந்து பணிப்பாளர்கள் சபை உறுப்பினர்கள் தம்மை நீக்கியுள்ளதாக ரெலிகொம் தலைவர் ரொஹான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரெலிகொம் நிறுவனத்தின் புதிய தலைவராக ரெயாஸ் மிஹிலார் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது . ரெலிகொம் நிறுவனத்தை லைக்கா நிறுவனத்திற்கு விற்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் இந்த மாற்றங்கள் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
டெலிக்கும் நிறுவனத்தை லைக்கா நிறுவனத்திற்கு வழங்கினால் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர குற்றம் சாட்டியிருந்தார்.