மருந்துகள் அல்லது தடுப்பூசிகளை வழங்கும் போது ஏற்படக்கூடிய ஒவ்வாமைகளைத் தடுக்க விழிப்புணர்வு திட்டம்

40

மருந்துகள் அல்லது தடுப்பூசிகளை வழங்கும் போது ஏற்படக்கூடிய ஒவ்வாமைகளைத் தடுப்பதற்காக சுகாதார ஊழியர்களின் விழிப்புணர்வு திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

தடுப்பூசிகளை வழங்கும் போது ஒவ்வாமைகளை கண்டறிதல், அவற்றை தடுத்தல் மற்றும் அவ்வாறான நிலைமைகளில் சிகிச்சையளித்தல் ஆகிய துறைகளில் இந்த விழிப்புணர்வு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என துணை சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி. விஜேசூரிய தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “மருந்துகளை வழங்கும் முறை குறித்து ஊழியர்களுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன், இவ்வாறான ஒவ்வாமைக்கான சிகிச்சையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அங்கு கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவித்த அவர், சுகாதார ஊழியர்களின் அறிவை மேலும் கூர்மைப்படுத்துவதே இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கம்.

சமீப நாட்களில் நாடு முழுவதும் பல இடங்களில் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலைகளால், சுகாதாரப் பாதுகாப்பு மீதான பொதுமக்களின் நம்பிக்கை பாதிக்கப்படும்.

எனவே, நோயாளிகள் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு செல்லாமலிருக்கும் வாய்ப்புகள் அதிகம் . அது உயிருக்கு ஆபத்தாக முடியும். அதனால்தான் இந்த திட்டம் சிந்திக்கப்பட்டது,” என தெரிவித்தார்.

Join Our WhatsApp Group