அனைத்து விமான நிலைய ஊழியர்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல விமான நிலைய தொழிற்சங்கங்களைச் சேர்ந்த சுமார் 3,000 ஊழியர்கள் குறைந்தபட்ச சம்பளத்தை ரூ.33,000 ஆக உயர்த்தக் கோரி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

