தமிழ்கட்சி எம்.பிக்கள் அமெரிக்க தூதுவருடன் இன்று சந்திப்பு

77

தமிழ்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. கொழும்பில் உள்ள உயர்ஸ்தானிகர் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதன்போது தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் சமகால பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளது.

கடந்த வியாழக்கிழமை இரா.சம்பந்தனுடன் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்போது, இலங்கை தமிழ் மக்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையின மக்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

கவனம் செலுத்தப்படவேண்டிய விடயங்கள், தேசிய அடையாளங்கள், சீர்திருத்தங்கள், பொறுப்பு கூறல் மற்றும் நீதிக்கான விடயங்கள் தொடர்பில் தீர்வு காண்பதற்காக முன்னோக்கி பயணித்தல் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக அமெரிக்க தூதுவர் தெரிவித்திருந்தார்.

Join Our WhatsApp Group