ஆஸ்திரேலியாவில் நெடுஞ்சாலையில் சென்ற 6 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதிய விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த விபத்து சம்பவம் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் சிட்னியில் உள்ள நெடுஞ்சாலையில் இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,குறித்த் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற கார் மீது மோதியது.இதனையடுத்து பின்னால் வந்த கார்களும் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கின.
ஒன்றன்பின் ஒன்றாக மொத்தம் 6 வாகனங்கள் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மேலும் இருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.