அனுராதபுரத்தில் இருந்து ஓமந்தை வரையிலான புனரமைக்கப்பட்ட புகையிரத பாதை இன்று உத்தியோகபூர்வமாக பொதுமக்களின் போக்குவரத்திற்காக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
“மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் சோதனை ஓட்டத்திற்காக குளிரூட்டப்பட்ட சொகுசு வண்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன” என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
48.5 கிலோமீற்றர் நீளமான அநுராதபுரம் – வவுனியா பாதையானது இந்தியக் கடன் வரியின் கீழ் மேம்படுத்தல் திட்டத்தின் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளது.