சபாநாயகர் நியமித்த தெரிவு குழுவில் இருந்து விலகியது எதிர்க்கட்சி

17

இலங்கையின் பொருளாதார பாதிப்பு தொடர்பாக (திவால்நிலையை) ஆராய்வதற்காக அண்மையில் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இருந்து விலகுவதற்கு எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான சமகி ஜன சந்தனய பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

“ஹொரேஜ் அம்மாஜென் பேன அஹன குழு” பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் நியமிக்கப்பட்டமைக்காக சபாநாயகரை எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கடுமையாக சாடியிருந்தது.

தேசிய மக்கள் சக்தி ( NPP )பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தும் குழுவிலிருந்து விலகியிருந்தார்.

(திருமதி) பவித்ராதேவி வன்னியாராச்சி, சட்டத்தரணி, டி.வி.சானக்க, விஜித ஹேரத், மஹிந்தானந்த அளுத்கமகே, எரான் விக்கிரமரத்ன, அசோக் அபேசிங்க, கௌரவ. ஜயந்த கெட்டகொட, ஹர்ஷன ராஜகருணா, (கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட, சஞ்சீவ எதிரிமான்ன, நாலக பண்டார கோட்டேகொட, ஷானகியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் மற்றும் (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார ஆகியோர் தெரிவுக்குழுவில் பணியாற்றுவதற்காக சபாநாயகரால் நியமிக்கப்பட்டனர்.

Join Our WhatsApp Group