பொலன்னறுவை மன்னம்பிட்டியில் கொட்டலிய பாலத்தில் தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்து மோதி ஆற்றுக்குள் கவிழ்ந்த விபத்து தொடர்பில் பஸ் மீட்கப்பட்ட பின்னரும் இன்று காலையும் கடற்படையினர், பொலிஸார் இணைந்து தேடுதல் பணியை முன்னெடுத்துள்ளனர்.
இந்த விபத்தில் இன்று காலை வரை 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 41 பேர் காயமடைந்து பொலன்னறுவை மற்றும் மனம்பிட்டிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.




கல்முனை மற்றும் அக்கரைப்பற்று பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனவும், சாரதியின் பாதுகாப்பற்ற வாகனம் விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். பாதுகாப்பற்ற பாலமாக இருந்த இந்த பாலத்தில் பலமுறை விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.