2023 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கந்தளாய் பிரதேச செயலகப் பிரிவில் “அவள் இறைவனின் பெருமை” எனும் தொனிப்பொருளில் மகளிர் தின நிகழ்வு பிரதேச செயலாளர் தலைமையில் அலுவலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், நாட்டில் நிலவும் மோசமான பொருளாதார சூழ்நிலையில், குழந்தையைப் பெற்றெடுப்பது பெரும் சவாலாக மாறியுள்ள நிலையில், அத்தகைய கர்ப்பிணிகளுக்கு பலத்தை அளித்து, யாரா குளோபல்( Yara Global PVT) லிமிடெட் ஆதரவுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உலர் உணவு வழங்கப்பட்டது.














