யாழ்ப்பாணம் நிலவரை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நிலாவரை பகுதியிலிருந்து சிறுப்பிட்டி நோக்கி துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்த போது எதிரே வந்த டிப்பர் வாகனம் மோதியதில் குறித்த முதியவர் உயிரிழந்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த 63 வயதான சுப்பையா இரத்தினசிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.