கிணற்றினுள் விழுந்த செல்லப்பிராணியை மீட்க இறங்கிய இளைஞன் உயிரிழப்பு

0
18

செல்லப்பிராணியை மீட்க கிணற்றில் இறங்கிய சிரேஸ்ட ஊடகவியலாளரின் மகன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கிளிநொச்சி இன்று காலை உதயநகர் பகுதியை சோகத்தில் ஆழ்த்தியது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உதயநகர் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட வீட்டு நாய் கிணற்றில் விழுந்த நிலையில் அந்த நாயை மீட்பதற்காக குறித்த இளைஞன் பாதுகாப்பற்ற கிணற்றில் தும்பு கயிறை பயன்படுத்தி இறங்கியுள்ளார்.

இதன்போது கயிறு அறுந்து கிணற்றில் விழுந்த குறித்த இளைஞன் மேல் ஏறாத நிலையில் தந்தை அயலவரின் உதவியுடன் குறித்த நாயை தேடியுள்ளார்.

சேற்றில் புதைந்த நிலையில் குறித்த இளைஞன் மாட்டிக்கொண்டமையால் உயிர் இழக்க நேரிட்டுள்ளது.இதையடுத்து அயலவர்களின் உதவியுடன் நீர் இறைக்கப்பட்டு அந்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

24 வயதுடைய விவேகாநந்தன் வேணிலவன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்