பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் குற்றங்களை இழைத்த குற்றச்சாட்டின் பேரில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் (IUSF) அழைப்பாளர் வசந்த முதலிகேவை எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வசந்த முதலிகே சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனு தொடர்பான உத்தரவை எதிர்வரும் ஜனவரி மாதம் 31ஆம் திகதி வழங்குவதாக பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸ் அறிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பிறப்பிக்கப்பட்ட தடுப்புக் கட்டளையின் கீழ் முதலிகே 90 நாட்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டார்.