FIFA 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் ‘டாப்-2’ இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றுக்கு (ரவுண்ட் 16) தகுதி பெறும்.
இதில் இன்று 4 ஆட்டங்கள் நடைபெற உள்ளது. அதன்படி குரூப் எச் பிரிவில் இரவு 8.30 மணிக்கு நடக்கும் போட்டியில் தென் கொரியா – போர்ச்சுக்கல் அணிகள் மோதுகின்றன. அதே நேரத்தில் நடக்க உள்ள மற்றொரு போட்டியில் கானா – உருகுவே அணிகள் மோதுகின்றன.
குரூப் ஜி பிரிவில் நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கும் போட்டியில் செர்பியா – சுவிட்சர்லாந்து அணிகள் மோதுகின்றன. அதே நேரத்தில் நடக்க உள்ள மற்றொரு போட்டியில் கேமரூன் – பிரேசில் அணிகள் மோதுகின்றன