கட்டாரில் நடைபெற்று வரும் உலகக்கிண்ண உதைபந்து போட்டியில் குழு – சி பிரிவில் நள்ளிரவு நடைபெற்ற சவுதி அரேபியா, மெக்சிகோ அணிகளுக்கு இடையிலான 2வது போட்டியில் சவுதி அரேபியாவை மெக்சிகோ. அணி வீழ்த்தியது.
முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்காததால் சமநிலை நீடித்தது. 2 வது பாதியின் 47வது நிமிடத்தில் மெக்சிகோ வீரர் ஹென்றி மார்ட்டின் முதல் கோலை அடித்தார்.
தொடர்ந்து 52 வது நிமிடத்தில் பிரி கிக் முறையில் மற்றொரு வீரர் லூயிஸ் சாவேஸ் கோல் அடித்து மெக்சிகோவை முன்னிலை பெறச் செய்தார். போட்டியின் முடிவில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதில் 95வது நிமிடத்தில் சவுதி வீரர் அல் தவ்சாரி கோல் அடித்தார். இதையடுத்து ஆட்டம் நிறைவு பெற்ற நிலையில் 2-1 என்ற கோல் கணக்கில் மெக்சிகோ வெற்றி பெற்றது. எனினும் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை மெக்சிகோ இழந்தது. அதேபோல் சவுதி அரேபியாவும் போட்டியில் இருந்து வெளியேறியது.