(கனகராசா சரவணன்)
அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் கான்ஸ்டபிள்கள் மற்றும் பயிற்சி கான்ஸ்டபிள்களுக்கு பாலியல் சேட்டையில் ஈடுபட்டுவந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை கைது செய்ததுடன் அவரை நேற்று முன்தினம் புதன்கிழமை (25) கடமையில் இருந்து பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பொலிஸ் நிலையத்தில் நிர்வாக பிரிவில் கடமையாற்றி வந்த அம்பாறை மாவட்டத்சை; சோந்த பொலிஸ்சாஜன் அங்கு கடமையாறிறிவந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் பயிற்றி கான்ஸ்டபிள்களுக்கு பாலியல் சேட்டையில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவந்துள்ளதாகவும் இது தொடர்பாக பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் முறைப்பாடு தெரிவித்ததையடுத்து பொலிஸ் சாஜனிடம் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் அவரை புதன்கிழமை கைது செய்து அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர் நீதிமன்ற பிணையில் வெளியே வந்தார்.
இதனையடுத்து, அவரை கடமையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.