அரசியல் கைதிகள் தொடர்பில் அரசின் நிலைப்பாடு

14

இந்துக்களின் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நல்லெண்ண செயற்பாடாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தண்டனை அனுபவித்து வரும் தண்டனைக் கைதிகள் இந்த வாரம் ஜனாதிபதியின் மன்னிப்பைப் பெற்றதாக அரசாங்கத்தின் மூத்த அமைச்சரவை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதில் நான்கு கைதிகள், கடந்த வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனர், மேலும் மூன்று பேர் இன்று சிறையிலிருந்து வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எட்டாவது கைதி விடுவிக்கப்படுவதற்கு முன் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்ட பின்னர் இவர்கள் பல்வேறு சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக கடுமையான சிறைவாசங்களை அனுபவித்து வருவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
இந்துக்களால் இன்று கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக இந்த நல்லெண்ணச் சைகை மேற்கொள்ளப்பட்டது, விடுவிக்கப்பட்ட பெரும்பாலான கைதிகள் நீண்ட கால சிறைவாசத்திற்குப் பிறகு தங்கள் குடும்பத்தினருடன் மீண்டும் கொண்டாட்டங்களுக்காக ஒன்றிணைவார்கள் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

மூன்று கைதிகளின் விடுதலையில் சிறிது காலதாமதம் ஏற்பட்டது, ஏனெனில் அவர்கள் ஏற்கனவே தங்களின் தண்டனைகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்திருந்தனர்.
அந்த மேல்முறையீடுகள் திரும்பப் பெறப்பட்டவுடன், அவர்கள் விடுவிக்கப்படுவார்கள். என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதி அமைச்சின் பரிந்துரைகளை ஆராய்ந்த பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதற்கான ஆவணங்களில் கடந்த புதன்கிழமை கையொப்பமிட்டார்.
மேலும் சிறைச்சாலைகள் பேச்சாளர் ஏக்கநாயக்கவின் கூற்றுப்படி, கொழும்பில் உள்ள மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு குற்றவாளிகள், அவர்களின் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒக்டோபர் 21 அன்று விடுவிக்கப்பட்டனர்.

எட்டு குற்றவாளிகளில் இருவர் சிறைவாசம் தொடர்பாக நீதிமன்றங்களில் தாக்கல் செய்த மேல்முறையீடுகளை திரும்பப் பெற்றவுடன் விடுவிக்கப்படுவார்கள்.
எஞ்சிய இரண்டு குற்றவாளிகளும் புனர்வாழ்வுத் திட்டத்தின் கீழ் விடுவிக்கப்பட உள்ளனர், இந்த விவகாரம் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவுறுத்தல்களுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

Join Our WhatsApp Group