கொழும்பின் பல பகுதிகளில் இன்று (22) அமுல்படுத்த திட்டமிட்டிருந்த 14 மணி நேர நீர்வெட்டு இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக நாளை இரவு 10 மணி முதல், நாளை ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணி வரை கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்திருந்த நிலையிலேயே தற்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.