61,391 டெங்கு: மேல் மாகாண மக்களுக்கு கடுமையான எச்சரிக்கை

95

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக எதிர்காலத்தில் டெங்கு நோயாளர்களின் தாக்கம் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

மேல்மாகாணத்தில்தான் அதிகளவு டெங்கு நோய் பரவுவதாக அந்த பிரிவின் பணிப்பாளர் சுதத் சமரவீர தெரிவித்தார். சமீபத்திய தரவுகளின்படி, இந்த வருடத்தில் இதுவரை 61,391 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் அதிகளவானவர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தவிர கண்டி, காலி, யாழ்ப்பாணம், கேகாலை, புத்தளம் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் இருந்தும் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

Join Our WhatsApp Group