ஸ்பெயினில் நடைபெறும் 23 வயதுக்குட்பட்ட உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியை பிரதிநிதித்துவப்படுத்த தகுதி பெற்ற,பொரளை சஹஸ்புர பிரதேசத்தைச் சேர்ந்த வீரரான சந்தருவன் குணவர்தனவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஐந்து இலட்சம் ரூபா நிதியை நன்கொடையாக வழங்கி வைத்தார். இது குறித்த போட்டியில் அவர் பங்கேற்கத் தேவையான நிதிச்செலுவுக்கான பங்களிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.