களனி கங்கைக்கு அருகில் வசிப்போருக்கு அபாய எச்சரிக்கை…!

18

களனி கங்கையின் நீர் மட்டமும் பெருக்கெடுக்கும் மட்டத்தை எட்டியுள்ளதாக நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, அடுத்த 3 தொடக்கம் 48 மணித்தியாலங்களுக்கு களனி கங்கையின் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அத்திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போது, ஹோமாகம, கடுவெல, பியகம, கொலன்னாவ, வத்தளை, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, சீதாவக்க, தொம்பே ஆகிய பகுதிகளில் வெள்ள மட்டத்தை எட்டியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp Group