அஹுங்கல்லையில் நேற்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய நபர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் இன்று மாலை பொலிஸ் அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது அஹுங்கல்லையில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில் குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.