அக்டோபர் மாதத்தின் பின்பு வறிய மக்கள் வீதிக்கு இறங்கும் நிலையை தடுக்க முடியாது- ஹிருணிக்கா

23

நாட்டில் மீண்டும் சுனாமியை போன்று மிகப் பெரிய மக்கள் புரட்சி வெடிக்கும்

நாட்டில் அடுத்தமாத இறுதியின் பின்னர் மிகப் பெரிய மக்கள் புரட்சி ஆரம்பமாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

தலங்கமை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பாடசாலை மாணவர்களின் போஷாக்கு வேலைத்திட்டம் ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அக்டோபர் மாதத்திற்கு பின்னர் சுனாமியை போன்று மிகப் பெரிய மக்கள் புரட்சி நாட்டுக்குள் ஏற்படும். அதனை எந்த வர்த்தமானி அறிவித்தல் மூலமும் நிறுத்த முடியாது. அக்டோபர் மாதத்திற்கு பின்னர் வீதியில் இறங்க போவது மிகவும் வறிய மனிதர்கள்.

இரண்டில் ஒன்றை பார்க்கவே அவர்கள் வீதியில் இறங்குவார்கள். வீட்டில் இருக்கும் அப்பாவி பிள்ளை பசியால் அழும் போதுதந்தையால் சும்மா இருந்து விட முடியாது. அப்போது அந்த தந்தை இரண்டில் ஒன்றை பார்த்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டே வெளியில் இறங்குவார் எனவும் தெரிவித்தார்.

Join Our WhatsApp Group