40 அரச நிறுவனங்களை தனியார்மயமாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது.
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன் வழங்குவதற்கு விதித்துள்ள நிபந்தனைகளுக்கு அமைய இந்த 40 அரச நிறுவனங்களும் தனியார் மயப்படுத்தப்பட இருப்பதாக எதிர்க்கட்சியின் பிரதம கொரோடா லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஒரு நிலையில், அரசாங்கம் பாராளுமன்றத்தில் அதனை சமர்ப்பித்தால், அதற்கு எதிர்க்கட்சி ஆதரவு வழங்கும் என லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் இணையாமலே நல்ல பல திட்டங்களுக்கு ஆதரவு வழங்கும் எங்களது கொள்கையாகவே இதை நாம் ஆதரவளிக்க இருக்கின்றோம் எனவும் அவர் கூறினார்.