மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபை முகாமையாளர் தனியார் பஸ்வண்டிகளுக்கு டீசல் வழங்குவதற்கு 75 ஆயிரம் ரூபா இலஞ்சம் வாங்கியபோது கொழும்பில் இருந்து வந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவு திணைக்கள அதிகாரிகளால் இன்று வியாழக்கிழமை (28) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது தனியர் பஸ்வண்டிகளுக்கு அந்தந்த மாவட்டத்திலுள்ள இலங்கை போக்குவரத்து சபையின் ஊடாக டீசல் வழங்கும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபையில் தனியார் பஸ்வண்டிகள் டீசலை பெற்று வந்துள்ளனர்.
இதன் போது, தனியர் பஸ்வண்டிகளிடம் போக்குவரத்துசபை முகாமையாளர் டீசல் வழங்குவதற்கு இலஞ்சமாக பணம்கோரி, அதற்கான பணத்தை வழங்கி தனியர் பஸ்வண்டி உரிமையாளர்கள் டீசலை பெற்று வந்தனர்.
இந்த நிலையில், தனியார் பஸ்வண்டி உரிமையார் ஒருவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குவிற்கு முறைப்பாடு செய்துள்ளதையடுத்து அவர்களின் ஆலோசணைக்கமைய சம்பவதினமான இன்று மாலை 5.30 மணிக்கு போக்குவரத்து சபையில் மாறுவேடத்தில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் இருந்துள்ள நிலையில் போக்குவரத்து சபை முகாமையாளர் கோரிய பணமான 75 ஆயிரம் ரூபாவை தனியார் பஸ்வண்டி உரிமையாளர் வழங்கிய போது,மறுவேடத்தில் இருந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் கையும் மெய்யுமாக பிடித்து அவரை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட முகாமையாளரை மட்டக்களப்பு நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச,ஊழல் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.