இக்கட்டான தருணத்தில் அரசை கவிழ்க்கும் சதியில் இருந்து அரசை காப்பாற்ற வேண்டும் என விமல் வீரவன்ச எம்பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பதற்கான விவாதத்தில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு கூறினார்.
தற்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் அல்லவெனவும், அவர்கள் அராஜகவாதிகள் எனவும் அவர் கூறினார்.
அரசை கவிழ்க்க சதி நடப்பதாகவும், அதனை அனுமதிக்க முடியாது என கூறிய வீரவன்ச, இலட்சக்கணக்கான மக்களின் நியாயமான தூண்டுதலுக்கு மதிப்பளிக்காமல், அரசை அழிப்பதற்காக மக்கள் அழுத்தத்தை பிரயோகிப்பதாகவும் விமல் வீரவன்ச எம்.பி. குறிப்பிட்டார்.
எவ்வாறான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இக்கட்டான தருணத்தில் அரசை கவிழ்க்கும் சதியில் இருந்து காப்பாற்ற வேண்டும் எனவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அரச சொத்துக்களை கையகப்படுத்துவது அமைதியானதா? என கேள்வி எழுப்பிய வீரவன்ச, இலங்கை இராணுவத்தின் அமைதியை கோழைத்தனமாக நினைக்க வேண்டாம் எனவும் தெரிவித்தார்.