தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கு அமைய எரிபொருள் விநியோகம் இன்று (23) நாட்டில் உள்ள 25 மாவட்டங்களில் பரீட்சார்த்தமாக விநியோகிக்கப்படும்.
25 மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இது பரீட்சார்த்தமாக நடைமுறைப்படுத்தி பார்க்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையானது நேற்று (22) கொழும்பில் இரண்டு இடங்களில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பரீட்சார்த்த நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் தேசிய மட்டத்தில் இது நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.