ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆசிய கண்டத்தில் கிரிக்கெட் விளையாடும் நாடுகளைக் கொண்டு 1984ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இந்திய அணி ஏழுமுறை கோப்பையை வென்று, ஆசியக் கோப்பையை அதிகம் வென்ற அணியாக இருக்கிறது!
1984ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு ஆசியக் கோப்பை தொடர், 50 ஓவர் போட்டிகளாகவே நடைபெற்று வந்தது. ஆனால் 2018ஆம் ஆண்டு முதல் 20 ஓவர் போட்டிகளாக நடத்த திட்டமிட்டு நடத்தப்பட்டது. இனி வருங்காலங்களிலும் ஆசியக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடராகத்தான் நடைபெறும். பழைய முறையில் 50 ஓவருக்கு திரும்ப வாய்ப்பில்லை.