நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி யாக ரணில் விக்கிரமசிங்க இன்று காலை பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இந்த நிகழ்வு பாராளுமன்ற கட்டிட தொகுதியில் நடந்தது. இதன் போது திடீரென மின்சாரம் தடைப்பட்டதாக தெரிய வருகிறது.
இது சதி நடவடிக்கையா? அல்லது தன்னிச்சையாக நடந்த ஒரு செயல்பாடா? போலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணை இப்பொழுது சி ஐ டி இதரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவியேற்பு நிகழ்வை சுயாதீன தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பவும், ஏனைய தொலைக்காட்சிகள் மூலம் ஒரே நேரத்தில் ஒளிபரப்பவும் திட்டமிடப்பட்டிருந்தது.
ஜனாதிபதி சிவப்புக் கம்பளத்தில் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்ததும் நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.
நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பட்ட திடீர் மின்தடை காரணமாக நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது.
நாடாளுமன்ற வளாகத்தில் மின் தடை ஏற்பட்டால் இரண்டு நிமிடங்களுக்குள் ஜெனரேட்டர்கள் தானாக இயங்குவது வழக்கம் எனவும், ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் போது சுமார் பத்து நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக, தொலைக்காட்சி சேவைகளில் நேரடி ஒளிபரப்பு வழங்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.