அனைத்து அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்று முதல் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
தற்போது நிலவும் எரிபொருள் மற்றும் போக்குவரத்து பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் எரிபொருள் பிரச்சனை சுமூகமாகிவிடும் என்று எரி சக்தி அமைச்சர தெரிவித்திருக்கின்ற நிலையில்,கல்வி அமைச்சு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.