ரணில் விக்ரமசிங்கவின் கீழ் ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் பிரதமர் பதவியை ஏற்காது என அதன் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று (17) கொழும்பில் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற கட்சி கூட்டத்தின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி பதவி உள்ளிட்ட எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்