ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டா பய ராஜபக்ஷ எப்போது? இராஜினாமா செய்வார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், தனது ராஜினாமா கடிதத்தை விரைவில் அனுப்பி வைப்பதாக, சபாநாயகர் இடம் கோட்டா பய ராஜபக்ஷ தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளதாக தெரிய வருகிறது.”
நான் மிகுந்த அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளேன். இராஜினாமா கடிதத்தை விரைவில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்” என கோட்டாபய ராஜபக்ஷ தனக்கு தெரிவித்ததாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் கடிதம் சமர்ப்பிக்காமல், அவர் பதவி விலகியதாக கருத முடியுமா என்பது குறித்து சட்ட ஆலோசனைகள் பெற்று வருவதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போது சபாநாயகர் இதனைத் தெரிவித்தார்.