இலங்கையில் நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களின் துன்பத்தில் தானும் பங்கேற்பதாக பரிசுத்த பாப்பரசர், திருத்தந்தை பிரான்ஸிஸ் ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பாக டுவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள அவர், “அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மையால் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வரும் இலங்கை மக்களின் துக்கத்தில் என்னை இணைத்துக் கொள்கிறேன். நாட்டின் ஆயர்களுடன் சேர்ந்து, அமைதிக்கான எனது வேண்டுகோளை நான் புதுப்பிக்கிறேன், ஏழைகளின் அழுகையைப் புறக்கணிக்க வேண்டாம் என்று அதிகாரம் உள்ளவர்களைக் கேட்டுக்கொள்கிறேன் ” என குறிப்பிட்டுள்ளார்.