டோக்கியோ: மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவைக் காபாற்ற மருத்துவர்கள் தீவிரமாகப் போராடி வருவதாக தற்போதைய பிரதமர் கிஷிடா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார். இருப்பினும் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரின் நோக்கம் என்னவென்று இதுவரை உறுதியாகவில்லை என்று கூறினார்.