சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை சாதகமாக நிறைவடைந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சற்று நேரத்திற்கு முன் உரையாற்றிய பிரதமர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், கடந்த காலங்களில் நாட்டின் அபிவிருத்திக்காகவே நாங்கள் சர்வதேச நாணய நிதியத்துடன் பேசினோம், ஆனால் இம்முறை அவ்வாறு அல்ல, வங்குரோத்து அடைந்துள்ள நாட்டை மீட்டெடுப்பதற்காகவே நாங்கள் பேச்சுவாரத்தை நடத்தியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக எமக்கு மாத்திரமல்ல உலக நாடுகள் பலவற்றிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக பிரதமர் தெரிவித்தார்.