ஒரே நாளில் கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் இன்று முதல் மூன்று பிராந்திய அலுவலகங்களில் ஆரம்பிக்கப்படுகின்றது. குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின், ஒரு நாள் சேவையின் கீழ் இது ஆரம்பிக்கப்பட இருக்கிறது.
இதன்படி, மாத்தறை, வவுனியா, மற்றும் கண்டி ஆகிய பிராந்திய அலுவலகங்களில் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
முதற்கட்டமாக ஒவ்வொரு பிராந்திய அலுவலகங்களிலும் முன்கூட்டியே பதிவு செய்த 100 பேருக்கு மாத்திரம் இந்தச் சேவை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக அண்மையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட, தம்மிக்க பேரேரா மேற்கொண்ட முதலாவது நடவடிக்கை இதுவாகும்.