கஹதுட்டுவ-பிரதேசத்தில் வீடொன்றில் தீப்பிடித்துக் கொண்டதில் இருவர் உயிரிழந்துள்ளனர் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
தீயில் சிக்கிய நாள் வரையில் கணவனும் மனைவியும் உயிரிழந்திருக்கிறார்கள்.இரு குழந்தைகளும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வீட்டில் வசித்து வந்த 41 வயதுடைய நபரும் 38 வயதுடைய அவரது மனைவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்து ஏற்பட்டதில் பலத்த காணமடைந்த குறித்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இவர்களது இரண்டு பிள்ளைகளும் தற்போது காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.