கொவிட் 19 தடுப்பூசி செலுத்தினால் வைரஸ் தொற்று ஏற்படாது என்று கூறிவிட முடியாதென பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி பெற்றுக்கொண்ட சிலருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. காலி, கேகாலை ஆகிய பகுதிகளில் இவர்கள் பதிவாகியுள்ளனர். தடுப்பூசி ஏற்றி 3 வாரங்கள் வரை உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகாது. எனவே, தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னரும் முறையாக சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என பதில் சுகாதார அமைச்சர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.